Sunday 10 January 2016

சாலைகள் புனரமைக்கும் போது உயரத்தை அதிரிக்காமல் செய்ய நடவடிக்கை வேண்டி மனு.

பெறுநர்,
செயல் அலுவலர்,
சிட்லபாக்கம் சிறப்பு நிலை பேரூராட்சி,
சென்னை-600064.

அன்புடையீர்,

பொருள்: சிட்லபாக்கம் பேரூராட்சியில் சாலைகள் புனரமைக்கும் போது
சாலையின் உயரத்தை அதிரிக்காமல் செய்ய நடவடிக்கை வேண்டி மனு.
                               
சிட்லபாக்கம் பேரூராட்சியில் சாலைகள் புனரமைக்கும் போது சாலைகளைகொத்தி அதனை அப்புறப்படுத்தாமல் அதன் மீதே சாலைகள் புனரமைப்பதினால்சாலைகளின் உயரம் பல இடங்களில் குடியிருக்கும் வீடுகளை விட தெருக்களின்உயரம் உயர்ந்து விடுகிறது.  இதனால் மழைக்காலங்களில் மழை நீர் மற்றும் சிலஇடங்களில் சாக்கடை கால்வாய்   கழிவு நீரும் கலந்து வீட்டினுள் வருவதால் மக்கள்பெரிதும் அவதிப்படுகின்றனர்.
மேலும், இதனால் நமது பகுதிக்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தும்பொழுது வீடுகளில் கழிவு நீர் தெருக்களில் உள்ள பாதாள சாக்கடை கால்வாயில்சேராமல் அதன் கழிவுகள் அனைத்தும் வீட்டுக்குள் திரும்ப வருகின்ற சூழ்நிலைக்குதள்ளப்படும்.  எனவே, இனி வரும் காலங்களில் சாலைகளை புனரமைக்கும்பொழுது பழைய சாலைகளை குறிப்பிட்ட அளவு தோண்டி அதனை அப்புறப்படுத்தியும் குடிநீர்குழாய், தொலைபேசி, மின்சாரம் போன்ற கேபிள்களை பழுதில்லாமல் உறுதி செய்தும்,குறிப்பாக சாலைகளை உயரப்படுத்தாமல் அதே அளவில் தரமான சாலைகளாகசெயல்படுத்த ஆவன செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.
தங்கள் உண்மையுள்ள
                                                                                                     
 (M.ரவி),
செயலர்

No comments:

Post a Comment