Monday 23 November 2015


                          Press  Release-Request for desilting Sembakkam Lake

The Office Bearers of Sri Sarvamangala Nagar Residents’ Association, Chitlapakkam met Shri T.K.M. Chinnayya, Hon. Minister for Animal Husbandry  and Shri K.N. Rmachandran, Hon. Member of Parliament,  Sriperumbudur  Constituency,  recently, to thank them for recommending in allotment of Rs.30 Lakhs from MPLAD Scheme for reconstruction of weir in the Sembakkam Lake.  After the work of reconstruction of weir was over, at present the Lake is brimming with water, a pleasant sight to be seen was informed to them. The Association further, requested for desilting the Sembakkam Lake and strengthening the bunds of the lake to increase the capacity of the Lake to hold more rain water without being wasted.  Further, it was requested to (1) introduce UGD for Chitlapakkam and other nearby local bodies to desist from letting drainage water by local bodies into the two water bodies namely Sembakkam and Chitlapakkam Lakes so that the ground water is not polluted, (2) to desist from dumping garbage in the Chitlapakkam Lake bed and to transfer the garbage already dumped (3) to desilt the Chitlapakkam Lake and also the water channels connecting the water bodies so that the rain water would not inundate the living areas during rainy seasons, (4) Supply of drinking water (Metro) through pipe lines in Chitlapakkam, (5) to stop Pallavaram Municipality from drawal of water from deep bore well in Sembakkam Lake bed continuously through lorries so as to save the water table in the area.

Hon. Minister and Hon. Member of Parliament promised that they would take up the matter to the concerned on all the Association’s demands for its early conceding. Hon. Minister appreciated the good work of the Association in putting up demands on several matters to the concerned, continuously.

Earlier, Sri Sarvamangala Nagar Residents’ Association requested the Secretary to Government, PWD, EE and AEE, PWD (WRD), Kancheepuram, that the reconstructed weir in Sembakkam Lake should be protected without being disturbed by the encroachers during rainy seasons, with the help of Police and Revenue Departments. The PWD Officials visited Sembakkam Lake recently, and took necessary action to protect the reconstructed weir as requested by the Association.

Wednesday 19 August 2015

69th INDEPENDENCE DAY CELEBRATIONS 2015

69th Independence Day Celebrations of our Country was celebrated by Sri Sarvamangala Nagar Resident’s Association, Chitlapakkam on 15th August 2015 at the Park of the Nagar at 7AM. Large number of residents and their wards participated in the function. Shri M. Ravi, Secretary of the Association welcomed the gathering. Shri R. Venkataraman, President of the Association hoisted the tricolour National Flag at the tiny hands of children gathered. In his address he said that the children should be molded in such a way fit to save our Country against all difficulties in future. Further, children have to be taught to keep environment clean, particularly their surrounding so that it will a role model to others. Patriotic songs were rendered by women and Children assembled. Kum. Jyothi, 5th standard student in her speech conveyed that the hard earned independence of our country by our leaders has to be protected by the present generation knowing about its significance. After singing of National anthem, flag salute and distribution of sweets the celebration concluded.




Friday 29 May 2015

சுற்றறிக்கை



 
நாள்: 20.05.2015

 நமது பகுதியின் நீராதாரமான செம்பாக்கம் ஏரியில் தற்பொழுது கழிவுநீர் விடப்படுவதால் விரைவாக மாசுபட்டு வருகிறது.  மேலும், இந்த ஏரியில் பல்லாவரம் நகராட்சியினர் இராட்சத கிணறு தோண்டி அதிலிருந்து நீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சி லாரிகளின் வழியே தொடர்ந்து எடுத்துச் செல்கின்றனர்.  இது குறித்து நமது சங்க நிர்வாகிகள் 16.03.2015 அன்று மாவட்ட ஆட்சியர், செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) பொதுப்பணித்துறை - காஞ்சிபுரம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் – தாம்பரம் அவர்களுக்கு கடிதங்கள் நேரில் வழங்கியுள்ளனர்.  இது சம்மந்தமாக 22.03.2015 அன்று நம் பகுதியின் பிற நலச்சங்கங்களின் கூட்டத்தினை கூட்டி, அதில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க  நமது கருத்துக்களை சுற்றறிக்கையின் வாயிலாக நமது பகுதிவாழ் மக்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.

 நமது கோரிக்கைகளில் ஒன்றான ஏரியில் உடைக்கப்பட்ட கலங்களை கட்டி, புனரமைக்க நமது நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 30 லட்சம் பரிந்துரைத்துள்ளதான தகவல் மன நிறைவு அளிப்பதாக உள்ளது. 

 இவ் ஏரியின் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி வசிக்கின்ற இப்பகுதி மக்களுக்கு ஏரியை சுற்றி வேலி அமைத்துள்ளதை தொடர்ந்து, ஏரியை தூர் வாரி, கரைகளை உயர்த்தி, கழிவு நீர் விடப்படுவதை தடுத்து,  சுத்தமான நீரினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டி மீண்டும் சங்க நிர்வாகிகள் அரசு செயலாளர் - பொதுப்பணித்துறை, முதன்மை பொறியாளர் (நீர்வளம்) – சேப்பாக்கம் அவர்களுக்கு 05-04-2015 அன்று நேரில் சென்று கடிதங்கள் வழங்கினர். இதுகுறித்து ஏற்கனவே   மாண்புமிகு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அவர்களுக்கு கடிதம் கொடுக்கப் பட்டுள்ளது.

மேலும், சிட்லபாக்கத்திற்கு குடிநீர் தொடர்ந்து குழாய்கள் வழியே கிடைக்க எதாவது ஒரு திட்டத்தின்கீழ் விரைந்து செயல்படுத்தவும், விடுபட்ட பாதாள சாக்கடை திட்டத்தினை நம் பகுதிக்கு அமல்படுத்த வேண்டியும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அலுவலகம், அரசு செயலாளர் - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, இயக்குனர் - பேரூராட்சிகள் இயக்ககம் ஆகியோருக்கும் நேரில் சென்று சங்க நிர்வாகிகள் நமது சங்க ஆலோசகர் திரு.சிவசாமி அவர்களுடன் 27-04-2015 அன்று கடிதங்கள் வழங்கினர்.

 குடிநீர் தொடர்ந்து குழாய் மூலம் வழங்காதது குறித்தும், உடன் வழங்க நடவடிக்கை எடுக்கவும், வீட்டு குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு விநியோகம் செய்யப்படாத நாட்களுக்கு கட்டணத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவும் வேண்டி செயல் அலுவலர் - சிட்லபாக்கம் அவர்களுக்கு 07-04-2015 அன்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

தற்பொழுது நகரில் ஏற்கனவே அமைந்துள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து R.O இயந்திரம் அமைத்து சுத்திகரிப்பட்ட குடிநீர் வழங்கப்படுவது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது. எனினும் அதிலிருந்து வெளியேறும் நிராகரிக்கப்பட்ட நீரினை வீணாக்காமல் மறுசுழற்சி முறையில் உபயோகிக்குமாறும் பேரூராட்சி தலைவரிடம் நேரில்  தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, நமது பகுதியின்  அனைத்து நலச்சங்கங்களையும் மீண்டும் 12.04.2015 அன்று கூட்டி,  மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முன்பு நடத்திய மாரத்தான் தொடர் ஓட்டம் போல் ஏரியை சுற்றி ஒரு நடைபயணம் மேற்கொள்ளவும், ஊர் கூடி ஓவியம் வரைதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது.

இவ் ஏரியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பிற நலச் சங்கங்களுடன் சேர்ந்து நாம் தொடர்ந்த வழக்கில் 15.05.2015 முதல் குப்பைகளை ஏரிகளில் கொட்டக்கூடாது என நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர் எனும் தகவலை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாம் அரசுக்கு அளித்த மனுவின் அடிப்படையில் 06-05-2015 அன்று கண்காணிப்பு பொறியாளர் (நீர்வள ஆதாரம்) - பொதுப்பணித்துறை - சேப்பாக்கம் அவர்கள் நேரில் வருகை புரிந்து எரியினை ஆய்வு செய்து, ஏரியில் கழிவுநீர் விடுவதை தடுக்குமாறு சிட்லபாக்கம் பேரூராட்சி, செம்பாக்கம் மற்றும் பல்லாவரம் நகராட்சிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஏரிகளின் நிலை குறித்து கடந்த 14-05-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "உள்ளது உள்ளபடி" எனும் நிகழ்ச்சியில் நமது பகுதியின் கருத்துக்களை தெரிவித்துள்ளோம். இதனை "YOU TUBE” வலைதளத்தில் https://www.youtube.com/watch?v=nK9dYQw1zOw எனும் முகவரியில் காணலாம்.

எனவே நமது மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற நாம் அனைவரும் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டுமெனவும், இதனைக் குறிக்கும் வகையில் தங்களது மேலான கருத்துக்களை எங்களுக்கு கடிதம் மூலமாகவோ, ssnrassociation@gmail.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 M. ரவி
செயலாளர்
9841322473



 

 

 

              

Tuesday 24 March 2015

செம்பாக்கம் ஏரி

சுற்றறிக்கை
22.03.2015

நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பல பொக்கிஷங்களில் ஏரி, குளங்களும் ஆகும். இதனை பாதுகாத்து பராமரிக்க வேண்டியது நமது கடமையாகும். எனவே, நாம் நமது அடுத்த தலைமுறையினருக்கு மீதமுள்ள நீர் நிலைகளையாவது பாதுகாத்து பராமரிக்க வேண்டிய அவசியத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டுமல்லவா? எனவே, நம் அருகில் உள்ள செம்பாக்கம் ஏரியினை பாதுகாக்கும் பொருட்டு Sembakkam Civic Welfare Association னுடன் நாமும் சேர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து அதில் கொட்டி எரிக்கப்படும் குப்பைகைளை வருகின்ற ஜூன் மாதம் முதல் வேங்கடமங்கலத்திற்கு எடுத்து செல்ல உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. எனினும் இவ் ஏரியில் மழை நீர் வடிகால் என்ற பெயரில் அதனுள் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சாக்கடையை ஏரியில் விடுகின்றனர். அதனால் கொசு, பன்றி, நாய்களின் பெருக்கத்தினால் அருகில் வசிப்பவர்களுக்கு நோய்கள் பரவும் ஆபத்துக்கள் உள்ளன. இந்த சூழலில் இப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணும் நோக்கத்தோடு நம் அருகில் உள்ள அனைத்து சங்கங்களை ஒருங்கிணைத்து 22.03.2015 அன்று நமது நகரில் கூட்டம் கூட்டப்பட்டு நீண்ட நேரம் விவாதித்து பிறகு கீழ் கண்ட தீர்மானத்தை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. செம்பாக்கம் ஏரியினை சுற்றி வசிக்கின்ற சிட்லபாக்கம், செம்பாக்கம், பல்லாவரம் பகுதி வாழ் மக்கள் இன்று அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தண்ணீருக்காக ஆழ் துளை கிணற்றில் கூட வற்றி விடும் அளவிற்கு நீர் மட்டம் குறைந்துள்ளது. சிட்லபாக்கத்தில் குழாய் மூலம் குடி நீர் விநியோகம் கடந்த ஜூன் மாதம் முதல் மாதத்திற்கு ஒரு முறை என்ற அளவிலும், பிப்ரவரி, மார்ச் மாதத்தில் அதுவும் வரப்பெறவில்லை. எனவே, விலை கொடுத்து குடி நீர் வாங்கி உபயோகிக்கும் நிலையில் உள்ளோம். தற்பொழுது இந்த ஏரியில் பல்லாவரம் நகராட்சியினர் ராட்சச கிணறு எடுத்து அதிலிருந்து தண்ணீரை லாரிகளில் எடுத்து சென்று பல்லாவரத்தின் பிற பகுதிகளுக்கு விநியோகம் செய்ய முயற்சி செய்வதற்கு முன் இந்த ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வாரி, ஆழப்படுத்தி உடைந்த கலங்களை கட்டி, பக்கத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சியின் சாக்கடை நீர் இவ் ஏரியில் கலக்காமல் தடுத்து சுத்தமான நீர் பிடிப்பு பகுதியாக மாற்றுவதற்கு முதலில் முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில் இச் செம்பாக்கம் எரியினை பாதுகாக்கும் பொருட்டு அனைத்து வழிகளிலும் நமது சங்கம் கடந்த 1998 முதல் தொடர்ந்து செயல் பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. எனவே இவ் ஏரியின் கிணற்றிலிருந்து நீரை வெளியே எடுத்துச் செல்வதை தடுக்க வலியுறுத்தி நாம் சென்ற 16.03.2015 அன்று மாண்புமிகு கால்நடை துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், செயற் பொறியாளர், பொதுபணித்துறை, வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கும் நேரில் கடிதங்கள் கொடுக்கப்பட்டன. மேற்கண்ட இக்கோரிக்கைகளை சிட்லபாக்கம் பேரூராட்சி மற்றும் செம்பாக்கம் நகராட்சியினர் நமது அமைச்சர் அவர்களிடம் எடுத்துச் சென்று அருகில் வசிக்கும் எங்களுக்கு ஒரு நல்ல தீர்வினை செயல் படுத்த வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேற்கண்ட கோரிக்கைக்கு சாதகமான பதில் இல்லாத பட்சத்தில் நமது அடுத்த கட்ட நடவிடிக்கையாக நீதி மன்றத்திற்கு சென்று நல்ல தீர்ப்பினை பெறுவதற்கு முயற்சி செய்ய இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. எனவே, சங்க உறுப்பினர்கள், பகுதி வாழ் மக்கள் தங்களுடைய கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எங்களுக்கு வருகின்ற 31.03.2015க்குள் கடிதம், அல்லது email id ssnrassociation@gmail.com மூலமாக தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.




R. வெங்கட்ராமன்
தலைவர்
9445120857